தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' |
டிரெயின், ஏஸ் மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தை பூரி ஜெகநாத்துடன் இணைந்து நடிகை சார்மியும் தயாரிக்கிறார். பாலிவுட் நடிகைகள் தபு, ராதிகா ஆப்தே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பஹத் பாசிலை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாவதால் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒரு வில்லன் நடிகர் நடித்தால் படத்துக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கும் என்பதால் பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.