திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
டிரெயின், ஏஸ் மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தை பூரி ஜெகநாத்துடன் இணைந்து நடிகை சார்மியும் தயாரிக்கிறார். பாலிவுட் நடிகைகள் தபு, ராதிகா ஆப்தே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பஹத் பாசிலை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாவதால் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒரு வில்லன் நடிகர் நடித்தால் படத்துக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கும் என்பதால் பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.