இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
‛குட் பேட் அக்லி' படத்தில் ‛ஒத்த ரூவாய் பாடல்' உள்ளிட்ட தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் ஏப்., 10ல் வெளியான படம் ‛குட் பேட் அக்லி'. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தபடம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 5 நாட்களில் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளது.
சமீபகாலமாக பழைய பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்தி டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்தவகையில் இந்த படத்தில் ‛‛தொட்டு தொட்டு பேசும் சுல்தானா..., ஒத்த ரூவாய் தாரேன்...'' போன்ற சில பாடல்களை பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக இளையராஜா இசையில் வெளிவந்த ‛‛ஒத்த ரூவாய் தாரேன்..., இளமை இதோ இதோ..., என் ஜோடி மஞ்சக்குருவி...'' ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் அவரது வக்கீல், ‛குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஒருவார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இந்த பாடல்கள் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.