இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
அஜித் நடித்து சமீபத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. தமிழகத்தில் மட்டும் முதல் 2 நாட்களில் சுமார் 45 கோடி வரை வசூலித்துள்ளது. இதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை யார் எடுக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நமக்கு கிடைத்த தகவலின்படி அஜித்தை வைத்து அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமே அஜித்தை அணுகியதாகவும் அதற்கு அஜித் பச்சைக்கொடி காட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
குட் பேட் அக்லி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டதும் இதே நிறுவனமே. இந்த படத்தின் வசூல் வேட்டையால் அஜித் மீது நம்பிக்கை வைத்து அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் இந்த படத்தை இயக்குவது யார் என்று முடிவாகவில்லை. ஒரு வேலை ஆதிக் ரவிச்சந்திரனே இந்த படத்தை எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.