ராம் இயக்கிய பறந்து போ படத்தின் டீசர் வெளியானது | குன்றக்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரவி மோகன், கெனிஷா | விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சீரியல் நடிகை சபானா | பிளாஷ்பேக் : படத்தின் வெற்றிக்கு காரணமான சில்க் ஸ்மிதாவின் கோபம் | சிறுவயது தோழி மறைவு : சோகத்தில் ஷோபனா | பென்ஸ் டைட்டில் கேரக்டரில் வில்லனாக நடிக்கும் நிவின்பாலி | பிளாஷ்பேக் : அன்று எம்.ஜி.ஆரை விட அழகான ஹீரோ | லைகாவிற்கு ரூ.21.29 கோடியை வட்டியுடன் செலுத்த விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு | வில்லன் ஆன ஒளிப்பதிவாளர் | ஆண்ட்ரியா பட வழக்கு: தணிக்கை குழுவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு |
1944 - 1945ம் ஆண்டுகளில் தியாகராஜ பாகவதர் நடிப்பதாக நான்கு படங்கள் அறிவிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் 'கோகுலதாஸி'. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் எம்.கே.டி பாகவதர் 30 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட பல படங்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர் நடித்தார். அதில் இந்த படமும் ஒன்று.
'கோகுலதாஸி' பட திரைக்கதை எழுத்தாளர் இளங்கோவனால் எழுதப்பட்ட ஒரு புராண கற்பனை கதை. இதில் ஹொன்னப்பா மூன்று வேடங்களில் நடித்தார். நாரதர், பார்வதியின் சாபத்தை எதிர்கொள்ளும் காமரூபன், மற்றும் கதாநாயகி அனுராதாவை (ராஜம்மா) கவர மாறுவேடத்தில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் நகைக்கடைக்காரன் ஆகிய வேடங்களில் நடித்தார். கதாநாயகி ராஜம்மா நடனக் கலைஞராகவும், தேவதாசியாகவும் இரண்டு வேடங்களில் நடித்தார். லலிதாவும், பத்மினியும் துணை வேடங்களில் நடித்தனர், நடனமாடினர்.
பாடல்கள் பாபநாசம் சிவன் மற்றும் அவரது சகோதரர் ராஜகோபால ஐயர் ஆகியோரால் எழுதப்பட்டன. எஸ்.வி. வெங்கடராமன் இசையமைத்தார். கே.சுப்பிரமணியம் தயாரித்து, இயக்கினார். திறமையான நடிகர்கள், இசை மற்றும் திறமையான இயக்கம் இருந்தபோதிலும், கோகுலதாஸி வெற்றி பெறவில்லை.