'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு |
மிகப்பெரிய ஏற்றங்களும், மிகப்பெரிய இறக்கங்களும் கொண்டது விஜயகாந்த் சினிமா வாழ்க்கை. சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு பிறகு அவரது திரை வாழ்க்கை முற்றிலும் மாறியது. ரஜினி, கமல் இருவரும் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், தனக்கென தனி பாதை போட்டு வெற்றி படங்களை கொடுத்தவர் விஜயகாந்த்.
1984ம் ஆண்டு, விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு. அந்த வருடத்தில் மட்டும் 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த். குழந்தை யேசு, சபாஷ், தீர்ப்பு என் கையில், நல்லநாள், நாளை உனது நாள், நூறாவது நாள், மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார், வீட்டுக்கு ஒரு கண்ணகி, வெள்ளைப் புறா ஒன்று, வெற்றி, வேங்கையின் மைந்தன், ஜனவரி 1, குடும்பம், சத்தியம் நீயே, மாமன் மச்சான், உள்பட அந்த வருடத்தில் மொத்தம் 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த். இந்தப் படங்களுடன்தான் விஜயகாந்துக்கு திருப்பம் தந்த 'வைதேகி காத்திருந்தாள்' படமும் வெளிவந்தது.