நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? |
மிகப்பெரிய ஏற்றங்களும், மிகப்பெரிய இறக்கங்களும் கொண்டது விஜயகாந்த் சினிமா வாழ்க்கை. சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு பிறகு அவரது திரை வாழ்க்கை முற்றிலும் மாறியது. ரஜினி, கமல் இருவரும் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், தனக்கென தனி பாதை போட்டு வெற்றி படங்களை கொடுத்தவர் விஜயகாந்த்.
1984ம் ஆண்டு, விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு. அந்த வருடத்தில் மட்டும் 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த். குழந்தை யேசு, சபாஷ், தீர்ப்பு என் கையில், நல்லநாள், நாளை உனது நாள், நூறாவது நாள், மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார், வீட்டுக்கு ஒரு கண்ணகி, வெள்ளைப் புறா ஒன்று, வெற்றி, வேங்கையின் மைந்தன், ஜனவரி 1, குடும்பம், சத்தியம் நீயே, மாமன் மச்சான், உள்பட அந்த வருடத்தில் மொத்தம் 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த். இந்தப் படங்களுடன்தான் விஜயகாந்துக்கு திருப்பம் தந்த 'வைதேகி காத்திருந்தாள்' படமும் வெளிவந்தது.