போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி | 'டப்பா - ஆன்ட்டி' ரோல் சர்ச்சை…'அந்த' நடிகை மன்னிப்பு கேட்டார், சிம்ரன் | ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? | அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் |
தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய திரையுலகில் வெளியான சில படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளன. தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் என்பது இன்னும் கனவாகவே உள்ளது. விரைவில் அந்த சாதனையையும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள சினிமா உலகம் சிறியது என்பதால் அங்கு 100 கோடி வசூல் என்பதே சில வருடங்களுக்கு முன்பு வரை பெரிய கனவாக இருந்தது. அந்த சாதனையை மோகன்லால் நடிப்பில் வெளிவந்த 'புலி முருகன்' படம் 2016ல் செய்து காட்டியது. அதன்பின் “லூசிபர், 2018, ஆவேஷம், ஏஆர்எம், மார்கோ, பிரேமலு, த கோட் லைப்' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றன.
மலையாள சினிமாவின் முதல் 200 கோடி படம் என்ற வசூலை கடந்த வருடம் வெளிவந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் பெற்றது. 240 கோடி வசூலித்த, அந்த சாதனையை ஒரு வருடம் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.
கடந்த வாரம் வெளிவந்த மோகன்லால் நடித்த 'எல் 2 எம்புரான்' படம் தற்போது 250 கோடி வசூலைக் கடந்து அந்தச தனையை முறியடித்துவிட்டது. எப்படியும் இன்னும் 50 கோடி வசூலித்து 300 கோடி வசூலைக் கடந்து முதல் 300 கோடி படம் என்ற புதிய சாதனையைப் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு மலையாள ரசிகர்களிடம் எழுந்துள்ளது.