ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… | மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காளி ஜெய் காளி |
நடிகை சினேகா-பிரசன்னா தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்தி வருகின்றனர். சில நட்சத்திர தம்பதிகளை போல இவர்களுக்கும் கருத்து வேறுபாடு, பிரிவு என்பது போன்று சில வதந்திகள் அவ்வப்போது வெளியானாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதர்ச தம்பதிகளாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க சென்ற இவர்கள் அங்கிருந்து கிரிவலம் பாதையில் வலம் வந்துள்ளனர்.
அதேசமயம் அப்படி அவர்கள் கிரிவல பாதையில் நடந்த போது கால்களில் செருப்பு அணிந்து நடந்து சென்றதும் செருப்பை அணிந்தபடியே அங்கே தேங்காய் உடைத்தது, பிரார்த்தனை செய்தது என அவர்கள் நடந்து கொண்டதும் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இப்படி புனித தலமான திருவண்ணாமலைய கிரிவலப் பாதையில் செருப்பு அணிந்து செல்லலாமா என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.