டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஆன்லைன் சூதாட்ட மொபைல் ஆப்-களை விளம்பரப்படுத்தியன் காரணமாக தெலுங்கு நடிகர்களான பிரகாஷ்ராஜ், ராணா டகுபட்டி, விஜய் தேவரகொன்டா, நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி மற்றும் சமூக வலைத்தள இன்புளூயன்சர்கள் 19 பேர் மீது தெலங்கானா காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மியாபுர் என்ற இடத்தைச் சேர்ந்த பணிந்திர சர்மா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல பிரபலங்கள், சமூக வலைத்தள இன்புளூயன்சர்கள் ஆன்லைன் சூதாட்ட மொபைல் ஆப்களை இணையதளங்கள் மற்ற தளங்களின் மூலம் விளம்பரப்படுத்துவதால் புகார் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தனிநபருக்கும், சமூகத்திற்கும் இது பாதிப்பை ஏற்படுவதாக தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஐதராபாத் மற்றும் சைபராபாத் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் மட்டும் அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.




