டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

அமெரிக்கா என்றாலே ஹாலிவுட் படங்களும், வளவளப்பான சாலைகளும்தான், வானுயர்ந்த கட்டிடங்களும்தான் நினைவுக்கு வரும், அங்குள்ள மக்கள் வாழும் சொகுசான வாழ்க்கை குறித்து நினைப்போம். ஆனால் அமெரிக்காவில் பிறநாட்டு குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது குறித்து 'சிட்டி ஆப் ட்ரீம்ஸ்' என்ற பெயரில் படமாக தயாரித்திருக்கிறார் இந்தியரான விவேக் ராமசாமி. இயக்கி இருப்பவர் மோஹித் ராமச்சந்தானி.
ஆரி லோப்ஸ், ரெனாட்டா வேகா, ஆல்பர்ரோ காஸ்ட்ரோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லிசா கர்னாட் இசை அமைத்துள்ளார், அலஜெண்ட்ரோ காஸ்ட்ரோ ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியான இந்தப் படம் இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகிறது.
ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பெற்ற இந்த படம் மெக்சிகோ நாட்டில் இருந்து கடத்தி வரப்படும் ஜீசஸ் என்ற சிறுவன் கொத்தடிமை தொழிலாளர் ஆக்கப்படுவதும், அதிலிருந்து அவர் மீள்வதும்தான் படத்தின் கதை.
இதுகுறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான ரூபர் பார்கர் கூறியதாவது: அமெரிக்க நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்திய நாட்டை பற்றி வெளிநாடுகளில் படமாகவோ டாக்குமெண்ட்ரிகளாகவோ காட்டும்பொழுது அதை ஒரு வறுமையின் சின்னமாகவும் பசிக்கொடுமையில் குழந்தைகள் தவிப்பதாகவும் குடிசை பகுதி பிச்சைக்காரர்கள் என்று தான் படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். அதேப்போல் அமெரிக்காவிலும் இன்னொரு மறுபக்கம் இருக்கிறது என்பதை சிட்டி ஆப் ட்ரீம்ஸ் உலகுக்கு உணர்த்தி இருக்கிறது.
பல போராட்டத்திற்கு பிறகு இந்த படம் அமெரிக்காவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகின் சொர்க பூமி என்று கூறப்படும் அமெரிக்காவில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கிறது என்று அங்குள்ள பிரபல ஹீரோக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். அந்த படம் தற்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் வெளியிடப்பட இருக்கிறது. என்றார்.




