பயங்கரவாத தாக்குதலால் ‛தி பிக் பாலிவுட் ஒன்' நிகழ்ச்சியை தள்ளிவைத்த சல்மான் | அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த சூர்யா | ரெயின்போவை ரசிக்கும் மகன்கள் : நயன்தாரா | சமரச உடன்பாடு : நடிகர் தர்ஷன் மீதான வழக்கு தள்ளுபடி | தொடரும் பட சண்டைக்காட்சிகளுக்கு வரவேற்பு : நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன ஸ்டண்ட் சில்வா | பஹத் பாசிலை தொடர்ந்து நிவின்பாலியை இயக்கும் அகில் சத்யன் | 40 நாள் திட்டமிட்டு முன்கூட்டியே நிறைவடைந்த பிரணவ் மோகன்லால் படம் | நடனத்தில் மாறிய ஸ்டெப்ஸ்... நகைச்சுவையுடன் சரிசெய்த மஞ்சு வாரியர் | பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆண்டுகால திருமண உறவை முறிப்பதாக அறிவித்தனர். இது ரஹ்மான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று (மார்ச் 16) காலையில், ரஹ்மானுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீரிழப்பு காரணமாக சிகிச்சை பெற்ற அவர், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கிடையே சாய்ரா பானு வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ரஹ்மான் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். நாங்கள் இருவரும் இன்னும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். அவருக்கு எந்த வகையிலும் நான் அழுத்தம் தர விரும்பவில்லை. அதனால் என்னை ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம் என ஊடகங்கள் வசம் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பிரிந்திருந்தாலும் அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு சாய்ரா பானு கூறியுள்ளார்.