பயங்கரவாத தாக்குதலால் ‛தி பிக் பாலிவுட் ஒன்' நிகழ்ச்சியை தள்ளிவைத்த சல்மான் | அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த சூர்யா | ரெயின்போவை ரசிக்கும் மகன்கள் : நயன்தாரா | சமரச உடன்பாடு : நடிகர் தர்ஷன் மீதான வழக்கு தள்ளுபடி | தொடரும் பட சண்டைக்காட்சிகளுக்கு வரவேற்பு : நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன ஸ்டண்ட் சில்வா | பஹத் பாசிலை தொடர்ந்து நிவின்பாலியை இயக்கும் அகில் சத்யன் | 40 நாள் திட்டமிட்டு முன்கூட்டியே நிறைவடைந்த பிரணவ் மோகன்லால் படம் | நடனத்தில் மாறிய ஸ்டெப்ஸ்... நகைச்சுவையுடன் சரிசெய்த மஞ்சு வாரியர் | பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' |
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகி வரும் படம் 'பராசக்தி'. இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. அந்த காலக் கதை என்பதால் சில முக்கிய காட்சிகளை அங்கு எடுத்து வருகிறார்களாம். தமிழகத்தில் உள்ள பல இடங்கள் பழைய தோற்றத்திலிருந்து மாறிவிட்டது. ஆனால், இலங்கையில் சில இடங்கள் இன்னும் பழமை மாறாமல் உள்ளதால் கதைக்கேற்றபடி அங்கு படப்பிடிப்பு நடப்பதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்தில் மலையாளத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாசில் ஜோசப் நடித்து வருகிறார். தற்போது நடந்து வரும் இலங்கை படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளாராம். அதர்வா சம்பந்தப்பட்ட காட்சிகளின் இலங்கை படப்பிடிப்பு முடிந்துள்ளதாம். சிவகார்த்திகேயன், ரவி மோகன், பசில் ஜோசப் ஆகியோருடைய காட்சிகள் படமாகி வருகிறதாம்.
'பராசக்தி' படப்பிடிப்பில் நடிகர்களுடன் வெளியில் செல்லும் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்த இயக்குனர் சுதா கொங்கரா விரைவில் இலங்கை புகைப்படங்களையும் பகிர வாய்ப்புள்ளது.