கார்த்தியை இயக்க போகும் கவுதம் மேனன் | ஏஜ தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படம் | ஓடிடியில் நேரடியாக வெளியான ஹாலிவுட் படம் | பிளாஷ்பேக் : ஜெயலலிதாவை பாடகியாக்கிய கே.வி.மகாதேவன் | பிளாஷ்பேக் : இன்று 'ஆலம் ஆரா' பிறந்தநாள் | இளையராஜாவிற்கு அரசின் சார்பில் விழா : முதல்வர் ஸ்டாலின் | புஷ்பா கேரக்டரில் நடிக்க மறுத்தேன் - ரேஷ்மா பசுபுலேட்டி | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு சினிமாவில் நடந்த அவமானம் | ரன்யா ராவ் கதாநாயகியாக நடித்த வாகா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் | மோகன்லாலின் அன்பு கட்டளையை மீற முடியவில்லை : விவேக் ஓபராய் |
நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் அல்லது ஆண் திரை கலைஞர்களுக்கு நிகராக பெண் திரை கலைஞர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மெல்ல மெல்ல வலுத்து வருகிறது. இந்த விஷயத்தை நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக முன்னெடுத்துள்ளார்.
சமீபத்தில் திரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார் சமந்தா. இவர் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை பெண் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்க உள்ளார். இது இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். சமந்தாவே இதில் கதையின் நாயகியாக நடிக்க போகிறார். இந்த படத்தில் பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க போகிறாராம் சமந்தா.
இதுபற்றி இயக்குனர் நந்தினி கூறுகையில், ‛‛நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க போவதாக தெரிவித்துள்ளார். அதாவது இதில் பணியாற்றும் ஆண் கலைஞர்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுமோ அதே சம்பளம் தான் பெண் கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் இப்படி ஒரு விஷயத்தை முன்னெடுத்து செய்யவில்லை'' என்றார்.
சமந்தாவின் இந்த விஷயம் பாராட்டுகளை பெற்று வருகிறது.