இயக்குனர் சசி உடன் இணையும் நடிகர் சசிகுமார்! | கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் இணைந்த விஷால்! | ரஹ்மானின் முன்னாள் மனைவி என சொல்லாதீர்கள்: சாய்ரா பானு வேண்டுகோள் | நடிகை பிந்து கோஷ் காலமானார் | தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' | முதலில் பேபி அடுத்து பேப்! அமலாபால் வெளியிட்ட வீடியோ பதிவு | 'பராசக்தி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட ஹோம் ஸ்டுடியோ! | வெளியீட்டிற்குத் தயாரான சமந்தாவின் முதல் தயாரிப்பு 'சுபம்' | சம்பளத்தை உயர்த்த கமிஷன் வெட்டும் டிராகன் |
தெலுங்கு திரை உலகில் முன்னணி இளம் நடிகர்கள், சீனியர் நடிகர்கள் என பலர் இருக்கும் நிலையில் ஆச்சரியப்படத்தக்க வகையில் நடிகர் மோகன்பாபுவின் மகனான நடிகர் விஷ்ணு மஞ்சு கடந்த முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 'கண்ணப்பா' என்கிற படத்தை தயாரித்து அதில் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் என பான் இந்திய பிரபலங்களை நடிக்க வைத்து வரும் ஏப்ரல் மாதம் அந்த படத்தை ரிலீஸுக்கு தயார் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தனது தந்தை மோகன்பாபு உடன் சேர்ந்து சென்று நேரில் சந்தித்து அவரது செயல்பாடுகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து தனது படத்திற்கான வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார் விஷ்ணு மஞ்சு. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தெலுங்கானா முதல்வரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவர் தெலுங்கு திரை உலக வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அவருடன் மேலும் திரையுலகம் குறித்த முக்கியமான பல விஷயங்களை விவாதித்தேன்” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் புஷ்பா-2 திரைப்படம் முதல் நாள் வெளியீட்டில் ஏற்பட்ட ஒரு பெண்ணின் அகால மரணம் தொடர்பாக படங்களை திரையிடுவதில் பல கண்டிப்பான விதிமுறைகளை முதல்வர் ரேவந்த் ரெட்டி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். அடுத்து தனது கண்ணப்பா திரைப்படம் பான் இந்தியா வெளியீடாக வெளியாக இருப்பதால் முன்கூட்டியே அது குறித்து சில விஷயங்களை விளக்கி படத்திற்கான சில சலுகைகளை பெறுவதற்காகவும் தான் விஷ்ணு மஞ்சு இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.