பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்தால் உடனடியாக சக்சஸ் மீட் நடத்துவது வழக்கம். படத்தின் வெற்றிக்குக் காரணமான பத்திரிகையாளர்களே என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால், ஒரு சில படக்குழுவினர் அவர்கள் மட்டுமே சக்சஸ் பார்ட்டியைக் கொண்டாடுவார்கள். வேறு யாரையும் அழைக்க மாட்டார்கள். அப்படியான ஒரு சக்சஸ் பார்ட்டியை 'டிராகன்' படக்குழு நடத்தியுள்ளது.
நட்சத்திர ஓட்டல் ஒன்றில் படக்குழுவினரும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் யாருக்கும் எந்தவிதமான அழைப்பும் இல்லை. படம் வெளியான அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் காட்சியின் போது அடுத்த சில நாட்களில் கண்டிப்பாக சக்சஸ் மீட்டை உங்களுடன் கொண்டாடுவோம் என்றார்கள்.
100 கோடி வசூலுக்கு பத்திரிகை விமர்சனங்களும் ஒரு காரணம். எதிர்பாராத பெரும் வெற்றி வந்ததும் பத்திரிகையாளர்களை மறந்துவிட்டு ஒரு பார்ட்டியைக் கொண்டாடியுள்ளார்கள். இப்படியான பல நன்றி மறந்த கொண்டாட்டங்களை பார்த்திருக்கிறோமே என பத்திரிகையாளர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். வளரும் நாயகனாக பிரதீப் ரங்கநாதனும், இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவும் இதை கவனத்தில் கொள்வது நல்லது.
தெலுங்கில் மட்டும் பத்திரிகையாளர்களை அழைத்து சக்சஸ் மீட் கொண்டாடியவர்கள் தமிழ் பத்திரிகையாளர்களை இங்கு புறக்கணித்தது சரியா என்ற கேள்வி பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.