ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கவுதம் கார்த்திக் நடிப்பில் 'ரங்கூன்' என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்' படத்தை இயக்கினார். இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக அவர் ஹிந்தி படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது தனுஷின் 55வது படத்தை அடுத்து தான் இயக்குவதாக அறிவித்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. தனுசுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் பின்னணியில் தனுஷின் 55வது படத்திற்கான பூஜை நடத்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், மகாசிவராத்திரியில் சிவபெருமானின் அருளைப் பெற்று அனைவரும் அமைதியுடனும் பாசிட்டிவ் எனர்ஜுயுடனும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நற்றுணையாவது நமச்சிவாயவே என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அடுத்தபடியாக இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் மற்றும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.




