இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
அசோக் செல்வன் நடிப்பில் 'ஓ மை கடவுளே' என்ற படத்தில் அறிமுகமானவர் அஷ்வத் மாரிமுத்து. அதையடுத்து தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'டிராகன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து அவர், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தனது அப்பா அம்மாவுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அஷ்வத் மாரிமுத்து. அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என் பெற்றோரை சந்தித்தேன். மாரிமுத்து என்கிற தனபால். மேலும் அப்பா எங்கு போனாலும் போட்டுட்டு போற ஜோல்னா பை. சித்ரா எனது அம்மா. டிராகன் படம் வெளியானதும் என் பெற்றோரை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். காரணம் நான் பிளஸ் டூ முடித்த பிறகு அவர்கள் என்னை டாக்டராக பார்க்க விரும்பினார்கள். ஆனால் நான் இன்ஜினியரிங் மாணவராக இருந்தேன். அதற்காகத்தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார் அஷ்வத் மாரிமுத்து.