26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

அசோக் செல்வன் நடிப்பில் 'ஓ மை கடவுளே' என்ற படத்தில் அறிமுகமானவர் அஷ்வத் மாரிமுத்து. அதையடுத்து தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'டிராகன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து அவர், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தனது அப்பா அம்மாவுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அஷ்வத் மாரிமுத்து. அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என் பெற்றோரை சந்தித்தேன். மாரிமுத்து என்கிற தனபால். மேலும் அப்பா எங்கு போனாலும் போட்டுட்டு போற ஜோல்னா பை. சித்ரா எனது அம்மா. டிராகன் படம் வெளியானதும் என் பெற்றோரை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். காரணம் நான் பிளஸ் டூ முடித்த பிறகு அவர்கள் என்னை டாக்டராக பார்க்க விரும்பினார்கள். ஆனால் நான் இன்ஜினியரிங் மாணவராக இருந்தேன். அதற்காகத்தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார் அஷ்வத் மாரிமுத்து.




