மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
திரைப்படங்களில் சிறைச்சாலை தொடர்பான காட்சிகள் அந்த காலத்தில் சென்னை மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்டது. சினிமா படப்பிடிப்புக்கு என்று தனி இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது புழல் சிறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதால் பெரும்பாலும் அரங்கம் அமைத்து படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்.
சேலம் மத்திய சிறைச்சாலையில் நடந்த ஒரே படப்பிடிப்பு மேஜர் சுந்தரராஜன் இயக்கிய 'இன்று நீ, நாளை நான்' என்ற படத்தின் படப்பிடிப்பு தான். இந்தப் படம் சி.ஏ.பாலன் எழுதிய 'தூக்குமர நிழலில்' என்று நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இந்த நாவலில் பாலன், சேலம் மத்திய சிறையில் நடந்த பல சம்பவங்களை எழுதியிருந்தார். காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உரிய அனுமதி பெற்று சேலம் சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடந்தது. சேலம் ஆத்தூர் சாலையில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான எல்.ஆர்.சண்முகத்தின் வீடு சிவக்குமாரின் வீடாக மாற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.
இப்படத்தில் சிவகுமார், ஜெய்சங்கர், லட்சுமி, சுலக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர். டி.எஸ்.விநாயகம் ஒளிப்பதிவு செய்து இருந்தார்; இளையராஜா இசையமைத்திருந்தார். சிவாஜி நடித்த 'கல்தூண்' படத்திற்கு பிறகு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய இரண்டாவது படம் இது. ஆனாலும் படம் வெற்றி பெறவில்லை.