தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

திரைப்படங்களில் சிறைச்சாலை தொடர்பான காட்சிகள் அந்த காலத்தில் சென்னை மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்டது. சினிமா படப்பிடிப்புக்கு என்று தனி இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது புழல் சிறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதால் பெரும்பாலும் அரங்கம் அமைத்து படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்.
சேலம் மத்திய சிறைச்சாலையில் நடந்த ஒரே படப்பிடிப்பு மேஜர் சுந்தரராஜன் இயக்கிய 'இன்று நீ, நாளை நான்' என்ற படத்தின் படப்பிடிப்பு தான். இந்தப் படம் சி.ஏ.பாலன் எழுதிய 'தூக்குமர நிழலில்' என்று நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இந்த நாவலில் பாலன், சேலம் மத்திய சிறையில் நடந்த பல சம்பவங்களை எழுதியிருந்தார். காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உரிய அனுமதி பெற்று சேலம் சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடந்தது. சேலம் ஆத்தூர் சாலையில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான எல்.ஆர்.சண்முகத்தின் வீடு சிவக்குமாரின் வீடாக மாற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.
இப்படத்தில் சிவகுமார், ஜெய்சங்கர், லட்சுமி, சுலக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர். டி.எஸ்.விநாயகம் ஒளிப்பதிவு செய்து இருந்தார்; இளையராஜா இசையமைத்திருந்தார். சிவாஜி நடித்த 'கல்தூண்' படத்திற்கு பிறகு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய இரண்டாவது படம் இது. ஆனாலும் படம் வெற்றி பெறவில்லை.




