ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏவிஎம் நிறுவனம் தயாரித்து 1945ல் வெளியான பிரம்மாண்ட படம் 'ஸ்ரீ வள்ளி'. முருக கடவுள் வள்ளியை காதலித்து திருமணம் செய்து கொண்ட வரலாறு சொல்லும் இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது தியாகராஜ பாகவதர். ஆனால் அவர் அப்போது பிஸியாக இருந்ததால் அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை இதனால் டி ஆர் மகாலிங்கம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஸ்ரீவள்ளி படம் முடியும் வரை வேறு எந்த படங்களிலும் நடிக்க கூடாது என்று அவருடன் ஏவிஎம் ஒப்பந்தம் செய்தது. அவரும் தன் பங்கிற்கு ஒரு நிபந்தனை விதித்தார்; முன்னணி நடிகையை தான் எனக்கு ஜோடியாக போட வேண்டும் என்றார்.
முதலில் வசுந்தரா தேவி நடிப்பதாக இருந்தது. ஆனால் அதனை டி. ஆர். மகாலிங்கம் ஏற்கவில்லை. இதனால் அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த குமாரி ருக்மணி தேர்வு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே ஏவிஎம் நிறுவனம் நடிக்கும் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதனால் ஏவிஎம் நிறுவனத்திற்கு குமாரி ருக்மணியை ஒப்பந்தம் செய்வதில் பிரச்சனை இல்லை.
படம் முடிந்ததும் படத்தை போட்டு பார்த்த ஏ வி எம் செட்டியாருக்கு திருப்தி ஏற்படவில்லை. டி ஆர் மகாலிங்கத்தின் குரலுக்கு ஈடாக குமாரி ருக்மணியின் குரல் அமையவில்லை. இதனால் அன்றைய சூழ்நிலையில் அறிமுகமாகி இருந்த பின்னணி இசை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குமாரி ருக்மணியின் பாடல்களை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக பி ஏ பெரிய நாயகியின் பாடலை பதிவு செய்தார். அந்த வகையில் முதல் பின்னணி பாடல் இடம் பெற்ற படமாக 'ஸ்ரீ வள்ளி' அமைந்தது. பி ஏ பெரியநாயகி முதல் பின்னணி பாடகி ஆனார்.
தனது குரல் சரி இல்லை என்று கூறி தான் பாடிய பாடல்களை நீக்கிவிட்டு பி ஏ பெரிய நாயகியின் குரலை பயன்படுத்தியதால் குமாரி ருக்மணி கோபம் அடைந்தார். இதை உணர்ந்து கொண்ட ஏவிஎம் நிறுவனம் அவருக்கு பெரும் தொகை கொடுக்க முன் வந்தது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத ருக்மணி, ஏவிஎம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்த அனைத்து படங்களிலிருந்தும் விலகினார்.
ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தை எதிர்த்து குமாரி ருக்மணி தன்மானத்துடன் நடந்து கொண்டது அன்றைக்கு பரபரப்பாக பேசப்பட்டது.