ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் மோகன் பாபு. அவருக்கும் அவரது இளைய மகனான நடிகர் மஞ்சு மனோஜுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் மோகன் பாபு வீட்டில் நடைபெற்ற தகராறை அடுத்து பத்திரிகையாளர்கள் அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தனர்.
அப்போது கேள்வி கேட்ட டிவி நிருபரைத் தாக்கினார் மோகன் பாபு. இதில் காயமடைந்த டிவி நிருபர் அளித்த புகாரை அடுத்து மோகன் பாபு மீது வழக்கு தொடுக்கப்பட்டது. காயமடைந்த நிருபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த வழக்கில் கைதாகி விடலாம் என்ற அச்சத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடுத்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார் மோகன் பாபு. அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.