மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் மோகன் பாபு. அவருக்கும் அவரது இளைய மகனான நடிகர் மஞ்சு மனோஜுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் மோகன் பாபு வீட்டில் நடைபெற்ற தகராறை அடுத்து பத்திரிகையாளர்கள் அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தனர்.
அப்போது கேள்வி கேட்ட டிவி நிருபரைத் தாக்கினார் மோகன் பாபு. இதில் காயமடைந்த டிவி நிருபர் அளித்த புகாரை அடுத்து மோகன் பாபு மீது வழக்கு தொடுக்கப்பட்டது. காயமடைந்த நிருபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த வழக்கில் கைதாகி விடலாம் என்ற அச்சத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடுத்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார் மோகன் பாபு. அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.