நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் மோகன் பாபு. அவருக்கும் அவரது இளைய மகனான நடிகர் மஞ்சு மனோஜுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் மோகன் பாபு வீட்டில் நடைபெற்ற தகராறை அடுத்து பத்திரிகையாளர்கள் அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தனர்.
அப்போது கேள்வி கேட்ட டிவி நிருபரைத் தாக்கினார் மோகன் பாபு. இதில் காயமடைந்த டிவி நிருபர் அளித்த புகாரை அடுத்து மோகன் பாபு மீது வழக்கு தொடுக்கப்பட்டது. காயமடைந்த நிருபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த வழக்கில் கைதாகி விடலாம் என்ற அச்சத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடுத்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார் மோகன் பாபு. அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.