பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
மலையாள திரையுலகில் மம்முட்டி நடித்த பிக் பி என்கிற படத்தில் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சமீர் தாஹிர். அதைத்தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த நீலாகாசம் பச்சக்கடல் சுவன்ன பூமி மற்றும் சாய் பல்லவி துல்கர் நடித்த கலி என இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கினார். பிறகு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் ஒளிப்பதிவாளராக மாறிய இவர் தொடர்ந்து ஒளிப்பதிவாளராகவே பணியாற்றி வருகிறார். குறிப்பாக சூப்பர் மேன் கதையம்சத்துடன் வெளியான மின்னல் முரளி படத்தில் இவரது ஒளிப்பதிவு மிகுந்த வரவேற்பு பெற்றது. கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் படமான ஆவேசம் படத்திலும் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.
இந்த நிலையில் 2016ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கலி படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்ப இருக்கிறாராம் சமீர் தாஹிர். ஹீரோ வேறு யாரும் அல்ல.. இந்தமுறையும் துல்கர் சல்மான் தான். இதற்கான கதை உருவாக்கும் பணியில் சமீப நாட்களாக ஈடுபட்டு வரும் சமீர் தாஹிர் வேறு எந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்வதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். துல்கர் சல்மான் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள படங்களை முடித்த பிறகு இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறாராம் சமீர் தாஹிர்.