யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து திரைக்கு வந்துள்ள படம் 'விடாமுயற்சி'. ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி உள்ள இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு அஜித்தின் நடிப்பு பாராட்டுகளை பெற்றாலும் படத்தின் இரண்டாவது பாதி சலிப்பு தட்டுவதாகவே அமைந்துள்ளது. தமிழகத்தில் அஜித்துக்கு பெரிய அளவில் ரசிகர் வட்டம் இருப்பதால் முதல் நாளில் 30 கோடி வசூலித்திருப்பதாகவும், உலக அளவில் 55 கோடி வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம் தெலுங்கில் 'பட்டுடாலா' என்ற பெயரில் வெளியான இப்படம் மிக மோசமான வசூலை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு தெலுங்கில் பட்டுடாலா படத்திற்கு பெரிய அளவில் விளம்பரமும் செய்யப்படவில்லையாம். இந்த படத்திற்கு தெலுங்கு ஊடகங்களும் எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்துள்ளன.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 7ம் தேதி) நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்துள்ள 'தண்டேல்' படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகியிருப்பதால் அஜித்தின் 'பட்டுடாலா' படத்தின் வசூல் இன்னும் பெரிய அளவில் பாதிக்கும் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன. என்றாலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படத்தை தெலுங்கு சினிமாவின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருப்பதால் அந்த படத்திற்கு இப்போதே தெலுங்கில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.