ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
கடந்தாண்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. இப்படம் தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இருந்தது. இப்படம் உலகளவில் ரூ.325 கோடிக்கு மேல் வசூல் சாதனையை ஈட்டியது. தற்போது அமரன் படம் திரைக்கு வந்து 100 நாட்களை நெருங்கும் நிலையில் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதன்படி, "சிப்பாய் விக்ரம் இல்லாமல் 'அமரன்' முழுமையடையாது என்பது தான் உண்மை. இக்கதையில் இரு தைரியமான ராணுவ வீரர்களின் வரலாற்றைச் சொல்ல முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். சிப்பாய் விக்ரமின் கதையை உலகிற்கு 'அமரன்' திரைப்படம் மூலம் சொல்ல அனுமதியளித்த அவரது குடும்பத்தினரின் பெருந்தன்மைக்கு எனது மனமார்ந்த நன்றி." என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.