யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலுவுக்கு அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதன்பிறகு மாமன்னன் படத்தில் நடித்த குணச்சித்ர வேடம் அவரை பேச வைத்தது. தற்போது பகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதுதவிர சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக சர்தார்-2 வை அடுத்து கார்த்தி நடிக்கும் அவரது 29வது படத்தில் நடிக்க போகிறார் வடிவேலு. விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் இந்த படத்தில் மாமன்னன் படத்தைப் போன்று காமெடி அல்லாத ஒரு குணச்சித்ர வேடத்தில் மீண்டும் நடிக்க போகிறாராம் வடிவேலு. அதோடு முதன்முறையாக கார்த்தி உடன் இணைந்து நடிக்க போகிறார் வடிவேலு.