இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
திருச்சியில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போதே டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவர் சிவகார்த்திகேயன். அப்படியே அதே டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆறு வருடங்கள் பணியாற்றினார். இடையில் எம்பிஏவும் படித்து முடித்தவர், 2012 பிப்ரவரி 3ம் தேதி வெளிவந்த 'மெரினா' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
அதன்பின் “எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், மாவீரன்,' என வெற்றிப் படங்களில் நடித்தார். கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'அமரன்' படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவில் தற்போது டாப் 10 பட்டியலில் இருக்கும் சிவகார்த்திகேயன் சினிமாவில் வந்து இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகிறது. இப்போது அவர் 24 மற்றும் 25வது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 25வது படமாக 'பராசக்தி' படம் உருவாகி வருகிறது.
சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், தனது திறமையால், கடுமையான உழைப்பின் மூலம் முன்னேறியுள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ள ஒருவராக இருக்கிறார்.