நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
இந்தியன் 2, மிஸ் யூ படங்களுக்கு பிறகு தற்போது டெஸ்ட், இந்தியன் 3 மற்றும் தனது 40வது படத்திலும் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த நிலையில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நீங்கள் ஏன் இன்னும் பெரிய ஸ்டார் ஆகவில்லை என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பெண்களின் இடையை கிள்ளுவது, அவர்களை அடித்து கொடுமைப்படுத்துவது, பெண்களை கட்டுப்படுத்துவது இது போன்ற கதாபாத்திரங்களில் எல்லாம் நான் நடிப்பதில்லை. காரணம் நான் எப்போதுமே பெண்களிடத்தில் மரியாதையுடனும் கண்ணியத்துடன் நடந்து கொள்வேன். அதை மீறும் வகையிலான வேடங்களில் நான் ஒருபோதும் நடிப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் எப்போதோ நானும் பெரிய ஸ்டார் நடிகராகி இருப்பேன் என்று கூறியுள்ளார் சித்தார்த்.