தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் |
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருக்கும் வினோதினி, ஒன்றைரை வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது திடீரென கட்சியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்' எனப் பதிவிட்டு விலகலை அறிவித்தார்.
இந்த நிலையில், மநீம கட்சியில் இருந்து விலகியது தொடர்பாக நமது தினமலருக்கு வினோதினி அளித்த விளக்கம்: கட்சியில் இருந்து விலகியது நன்றாக யோசித்தே பிறகு எடுத்த முடிவு. எடுத்தோம் கவிழ்த்தோம் என நான் எதுவும் செய்வதில்லை. சில நாட்களாக எனக்குள் உறுத்தல், குற்ற உணர்வு இருந்தது. கட்சியில் எனது பயணம் பற்றி 2, 3 விஷயங்களில் அறிவுறுத்தினர். தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கும்போது, ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு கட்சி, எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும். ஆனால், மநீம ஆளும்கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது. அப்படியிருக்கையில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அப்படியான வேலையில் நான் ஈடுபட்டிருந்தேன்.
ஆனாலும், எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மேலும், சினிமாவில் முன்னணி இடத்தில் இல்லாததால் பல படங்களில் நடித்தால் தான் கொஞ்சம் ஊதியம் பெற முடியும். கட்சியில் இருந்து விலகல் தொடர்பாக கமல்ஹாசனிடம் பேசவில்லை, எக்ஸ் தளத்தில் மட்டுமே தெரிவித்தேன். கட்சியில் இருந்து சிலர் தொடர்புகொண்டு, சில விஷயங்கள் பற்றி பேசிக்கொள்ளலாம் எனக்கூறினர். கட்சியில் இருப்பவர்கள் யாரும் எதிரி அல்ல, அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம்.
கட்சியில் இருந்து 2, 3 விஷயங்களில் பொறுப்பேற்க சொன்னார்கள். ஆனால் என்னால் அதனை முன்னெடுக்க முடியவில்லை. கட்சியில் இருக்கும் அணிகளில் எதை வேண்டுமானாலும் எடுத்து வலுப்படுத்தி இருக்கலாம். ஆனால் என்னால் அதில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. நேரம் இல்லை என்பதால் தான் நான் மநீம.,வை விட்டு வெளியேறினேன். அப்படியிருக்கையில் இப்போதைக்கு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை. இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.