பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத்திற்கு முன்பிருந்தேபே நடிப்பில் எதிரெதிர் துருவங்களாக இருந்து வருகிறார்கள் நடிகர் ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்த நிலையில் கமல் மக்கள் நீதி மய்யம் என்கிற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்தே விட்டார் கமல். ஆனால் ரஜினிகாந்த் சூழ்நிலை காரணமாக அரசியலில் இருந்து பின் வாங்கினார். தற்போது விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை தான் பரபரப்பாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு இணையாக அவ்வப்போது ரஜினி, கமல் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் ஒருவர் ஒருவர் மோதிக்கொள்வதையும் அதிகமாக பார்க்க முடிகிறது.
அப்படி ஒரு ரஜினி ரசிகர் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டம் ஒன்றை விமர்சித்து கிண்டலாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். கமலின் ரசிகர்கள் சிலர் இதற்கு பதில் விமர்சனம் செய்திருந்தாலும் கமலின் கட்சியில் பொறுப்பு வகிப்பவரும் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்து வருபவருமான நடிகை வினோதினி, கமலுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து ரஜினிகாந்த் குறித்து மறைமுகமாக கடுமையான விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‛‛அம்பானி திருமணத்தில் ஆடியதில்லை. ஆதித்தநாத் காலில் விழுந்ததில்லை. இகழ்ந்து பேசாதோர் நம் தொண்டர். ஈஷா யோகம் கண்டதில்லை. உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட்டை எதிர்த்த போராளி சாவுகள் நாட்டைச் சுடுகாடாக்கும், போராளிகள் தீவிரவாதிகளென சொல்லவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் தராமலிருந்ததில்லை. எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று பஞ்ச் பேசாமல் வந்துவிட்டோம். ஏழ்மை இந்தியாவில் பணமதிப்பிழப்பை ஆதரிக்கவில்லை. ஐந்நூறு கோடி வசூலிருந்தும் ஆறரை லட்ச சொத்து வரி செலுத்தாமலில்லை. ஒருநாளும் சரியான வருமானவரி கட்டாமலிருந்ததில்லை
So…
ஓரமாகப் போய் அழவும்,
அது உத்தமம்'' என ரஜினி பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் இப்போதும் ரஜினியும் கமலும் மிக நெருங்கிய நட்பை பேணி பாதுகாத்து வரும் நிலையில் அவரது ரசிகர்கள் தேவையில்லாமல் ஒரு நடிகரை இன்னொரு நடிகரின் ரசிகர்கள் தரம் தாழ்த்தி பேசி அவர்களுக்கு தரக்குறைவான விமர்சனங்களை தேடி தருவது அழகல்ல என்று இரண்டு நடிகர்களின் படங்களையும் ரசிக்கும் பொதுவான ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல கமல், ரஜினி ஆகியோர் குறித்த எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதை இரு தரப்பு ரசிகர்களும் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.. அதுதான் அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்கிற கருத்துக்களையும் சோசியல் மீடியாவில் அதிகமாக பார்க்க முடிகிறது.