டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

1943ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் கன்னடத்தில் தயாரித்த படம் 'சத்ய ஹரிச்சந்திரா'. ஆர்.நாகேந்திர ராவ் இயக்கி நடித்தார். சுப்பையா நாயுடு, லட்சுமிபாய் உள்ளிட்ட பலர் நடித்தனர். அனைவரும் கன்னட நடிகர்கள். ஆர்.சுதர்சனம் இசை அமைத்திருந்தார், கிருஷ்ண அய்யர் ஒளிப்பதிவு செய்தார். படம் தயாரானதும் அதை போட்டு பார்த்த மெய்யப்ப செட்டியார் இதே படத்தை தமிழில் தயாரிக்க விரும்பினார்.
அப்போது ஏவிஎம் நிறுவனத்தில் சீனியர் ஆடியோகிராபராக இருந்தவர் ஏ.எல்.ராகவன் “தனியாக தயாரிக்க வேண்டாம். இப்போது 'டப்பிங்' என்ற புதிய தொழில்நுட்பம் வந்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் பின்னணி இசையை மாற்றாமல் பேசும் வசனத்தை மட்டும் மாற்ற முடியும்” என்றார். ஆனால் இதனை மெய்யப்ப செட்டியார் நம்பவில்லை. இது சாத்தியமே இல்லை. கன்னட உச்சரிப்பு வேறு, தமிழ் உச்சரிப்பு வேறு என்றார்.
ஒரு ரீலை மட்டும் மாற்றிக் காட்டுகிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் பின்பு முழு படத்தையும் மாற்றலாம் என்று ஒரு ரீலை டப் செய்தார். கன்னட வாயசைப்புக்கு ஏற்ற வார்த்தைகளை போட்டு வசனத்தில் மாற்றம் செய்தார். அது சரியாக அமைந்தது. ஆச்சர்யப்பட்ட மெய்யப்ப செட்டியார் முழுபடத்தையும் டப் செய்ய சொன்னார்.
பின்னர் தனது தொழிலாளர்கள், பொதுக்களுக்கு போட்டு காட்டி ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று கேட்டார். அவர்கள் அசல் தமிழ் படம் போலவே இருப்பதாக சொன்னார்கள். பின்னர் படத்தை தியேட்டரில் வெளியிட்டார். படமும் வெற்றி பெற்றது. கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த இந்த படமே தமிழில் முதல் டப்பிங் படம்.




