இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சமீபத்தில் நடைபெற்ற பாலிவுட் திரைப்படமான 'ச்சாவா' திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா கலந்து கொண்டது ஹிந்தி திரையுலகில் மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்களையும் கொண்டு வந்து சேர்த்துள்ளது. காரணம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஷ்மிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது காலில் எதிர்பாராத விதமாக அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை எடுத்துக் கொண்டு வரும் ராஷ்மிகா படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
ஆனாலும் இந்த ச்சாவா திரைப்படத்தில் தான் நடித்துள்ள ஏசுபாய் கதாபாத்திரம் தான் வாழ்நாளில் நடிக்க விரும்பியது போன்ற ஒரு மிகப்பெரிய கனவு கதாபாத்திரம் என்று அவ்வப்போது கூறி வந்தார் ராஷ்மிகா. இந்த நிலையில் ச்சாவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதில் எப்படியேனும் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய ராஷ்மிகா ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு பயணித்து ச்சாவா பட விழாவில் கலந்து கொண்டார். அந்த விழா மேடையில் கால்களை நொண்டி அடித்தபடியே இன்னொருவரின் கைத்தாங்கல் உதவியுடன் வந்து ராஷ்மிகா பேசியது விழாவிற்கு வந்த அனைவரையுமே நெகிழ வைத்துவிட்டது.
நல்ல நிலையில் இருக்கும் பல நடிகைகளும் தங்களது பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மறுத்து ஒதுங்கிவிடும் நிலையில் இப்படி ஒரு சூழ்நிலையில் கூட ராஷ்மிகா வந்து கலந்து கொண்டது ரசிகர்களிடமும் அவர் மீதான மதிப்பை இன்னும் சில மடங்கு அதிகரிக்க செய்துவிட்டது. இந்த நிலையில் தன்னுடைய கால் எலும்பு முறிவு குறித்த எக்ஸ்ரே புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் காளில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர் கடந்த இரண்டு வாரங்களாகவே தனது சொந்தக் காலில் நிற்க முடியாத சூழலில் இருப்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் அனைவரும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள் என்றும் ஒரு அன்பான அறிவுரையையும் அவர் கூறியுள்ளார்.