மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
தெலுங்குத் திரையுலகத்தில் பான் இந்தியா படங்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தாலே வெளியான முதல் நாளிலேயே 100 கோடி, 150 கோடி வசூல் என சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தப் படங்கள் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே ஓரளவிற்கு வரவேற்பைப் பெறுகின்றன. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், கர்நாடகாவில் பெங்களூருவைத் தவிர பிற இடங்களிலும் பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை.
இப்படி வெளியாகும் வசூல் விவரங்கள் பெரும்பாலும் தவறான தகவலாகவே இருப்பதாக தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படம் முதல் நாளில் 186 கோடி வசூலைப் பெற்றதாக போஸ்டர் வெளியானது. அது உள்ளிட்ட மற்ற சில படங்களின் இப்படியான போஸ்டர்கள்தான் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர்களிடம் வருமான வரி சோதனை நடைபெற காரணமாக அமைந்தது என தகவல் வெளியாகி உள்ளது.
இப்படியான போலி போஸ்டர்களை வெளியிடுவதை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தவிர்க்க வேண்டும் என்ற குரல் தெலுங்கு சினிமா ரசிகர்களிடமிருந்து எழுந்துள்ளது. ஹீரோக்களுக்கு இடையே உள்ள போட்டியால்தான் இப்படியான போஸ்டர்களை வெளியிடுவதாக திரையுலகினரும் குறைபட்டுக் கொள்கிறார்கள். போலி வசூலில் வந்த போஸ்டர் சண்டை வருமான வரி சோதனையில் வந்து நிற்கிறது.