ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்குத் திரையுலகில் கடந்த இரண்டு நாட்களாக சினிமா தயாரிப்பாளர்கள் சிலரது வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு, 'புஷ்பா 2' தயாரிப்பாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இன்று 'புஷ்பா 2' படத்தின் இயக்குனர் சுகுமார் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அப்படத்திற்காக அவர் லாபத்தில் சில சதவீதம் வருவாயாகப் பெற்றதாக செய்திகள் வந்தன. அப்படம் 1800 கோடி வசூலைக் கடந்துள்ளது. மேலும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஹைதராபாத் புறநகரில் பல கோடி ரூபாய்க்கு இடம் வாங்கியதாகவும் அதனால்தான் வருமான வரி சோதனை நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
'புஷ்பா' தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரது வீடுகளைத் தொடர்ந்து அதில் நடித்துள்ளவர்களின் வீடுகளிலும் சோதனை நடக்குமா என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளதாகத் தெரிகிறது.