ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
காமெடியனாக மட்டுமின்றி அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்கள் யோகி பாபு. அதோடு சமீப காலமாக யோகி பாபு திருப்பதி, திருத்தணி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல ஆலயங்களில் அவரை பார்க்க முடிகிறது. தான் மட்டுமின்றி தனது குடும்பத்துடன் சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதோடு தனது கழுத்திலும், கையில் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் சில கயிறுகளையும் அவர் கட்டியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகி பாபுவிடம், உங்கள் கையில் பல கயிறுகளை கட்டி இருக்கிறீர்களே.. என்ன காரணம்? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு யோகி பாபு, ''இதெல்லாம் சாமி விஷயம். நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய விஷயம். அதனால் இதைப் பற்றி இதற்கு மேல் பேச வேண்டாம். அதோடு இந்த இடத்தில் இது தேவையில்லாத கேள்வி'' என்றும் ஒரு நறுக் பதில் கொடுத்தார் யோகி பாபு.