எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
நடிகர் ஜெயம் ரவி, சமீபத்தில் ரவி மோகன் ஸ்டுடியோ சென்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதோடு, தனது பெயரையும் ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். அடுத்தபடியாக தனது நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தயாரித்து அதை தானே இயக்கி, நடிக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த படத்தில் அவரது மகன் ஆரவ் ரவியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு கடந்த 2018ம் ஆண்டு சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ரவி மோகன் நடித்த டிக் டிக் டிக் படத்தில் அவர் மகன் ஆரவ் ரவியும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தான் இயக்கும் படத்தில் மீண்டும் மகனை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கிறார் ரவி மோகன். இந்த படத்திற்கான கதையை அவரது தந்தையான எடிட்டர் மோகன் எழுதியுள்ளாராம்.