மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஹரி ஹர வீர மல்லு. இந்த படத்தை ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஆகிய இருவரும் இயக்கியுள்ளார்கள். இப்படத்தில் பவன் கல்யாணுடன் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், நாசர் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, கீரவாணி இசையமைத்திருக்கிறார். இந்தப்படம் கிபி 16ம் நூற்றாண்டு பின்னணி கதையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு தத்துவ பாடலை பவன் கல்யாண் பின்னணி பாடி இருக்கிறார். இந்த பாடலின் தமிழ் பதிப்பை பா.விஜய் எழுதியுள்ளார். மேலும் தெலுங்கில் பவன் கல்யாண் சொந்த குரலில் பாடியுள்ள இந்த பாடலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மற்ற மொழிகளுக்கும் அவரது குரலை பயன்படுத்தியுள்ளார்கள். கேட்கணும் குருவே என்று தொடங்கும் இந்த பாடல் ஜனவரி 17-ம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.