வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
மலையாள நடிகை ஹனிரோஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை சோசியல் மீடியா மூலமாக சைபர் தாக்குதல் நடத்தி அவதூறு பரப்பினார்கள், மிரட்டல் விடுத்தார்கள் என்று கிட்டத்தட்ட 30 பேர் மீது எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் பலர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக செல்வாக்கு மிகுந்த செம்மனூர் ஜுவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான பாபி செம்மனூர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இதே போன்று மீடியா ஆர்வலர் என தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ராகுல் ஈஸ்வர் என்பவர் தொடர்ந்து நடிகை ஹனிரோஸ் மீது சோசியல் மீடியாவில் தாக்குதல் நடத்தி வந்துள்ளார். குறிப்பாக பாபி செம்மனூர் கைது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது, ஹனிரோஸ் குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஹனிரோஸ் அளித்த புகாரின் பேரில் ராகுல் ஈஸ்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் ராகுல் ஈஸ்வர். இவர் மீது ஹனிரோஸ் அளித்துள்ள புகாரில் ராகுல் ஈஸ்வரின் அவதூறான வார்த்தைகளும் சோசியல் மீடியாவில் அவரது மிரட்டல்களும் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்கிற அளவிற்கு எண்ணத்தை தூண்டின என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் ராகுலுக்கு முன் ஜாமின் கிடைப்பது சிக்கல் தான் என்று சொல்லப்படுகிறது.