சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இன்று திரைக்கு வந்துள்ள படம் 'மதகஜராஜா'. நேற்று இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. இதில் விஷால், சுந்தர். சி மற்றும் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசிய விஷால், "சமீபத்தில் எனக்கு சாதரணமான காய்ச்சல் தான் இருந்தது. இப்போது குணமாகிவிட்டேன். நிறைய பேர் நான் 3 மாதம், 6 மாதம் படப்பிடிப்பிற்கு வரமாட்டேன் என்றார்கள். இப்போது அந்த மாதிரி எந்தவொரு நடுக்கமும் இல்லை. மைக் சரியாக தான் பிடித்துள்ளேன். எல்லோரும் இந்த படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். சாகும் வரை உங்கள் அன்பை மறக்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.