32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் வடிவேலு. தற்போது மாரீசன் மற்றும் கேங்கர்ஸ் படங்களில் நடித்து வருகிறார். மதுரையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக வடிவேலு பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு : ‛‛இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. நான்கு நாளுக்கு முன்பே எனக்கு பொங்கல் வந்தது போல உள்ளது. மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற ஆசை நடந்துவிட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை முடிந்தால் பார்க்க போவேன். மாடு பிடிக்கிற ஆள் நான் கிடையாது. என்னைய அது தள்ளிவிட்டு போயிடும். பொங்கலை கொண்டாடி முடித்துவிட்டு மற்ற வேலையை பார்க்க போய் விடுவேன்.
ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரியை போடுங்கனு சொன்னேன். அது ஜாலியான மேட்டர் தானே. வடிவேல் சொன்னதுல எதுவும் தப்பில்லை, ஏழை பாழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கன்னு சொன்னேன்.
தற்போது சுந்தர் சி-யின் ‛கேங்கர்ஸ்' படத்திலும், பஹத் பாசிலோடு ‛மாரிசன்' படமும் போய்கிட்டு இருக்கு. கேங்கர்ஸ் முழுநீள நகைச்சுவை படமாக இருக்கும். அடுத்து பிரபுதேவா உடன் சேர்ந்து ஒரு படம் நடிக்கிறேன். இப்போதெல்லாம் மாமன்னன் மாதிரி தேர்ந்தெடுத்த படங்களில் நடிக்கிறேன் என்றார்.
தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை, அஜித்தின் கார் ரேஸ் பற்றிய கேள்வியை அவரிடத்தில் முன்வைக்க, வேற ஏதாவது பேசுவோமா என்றார்.