போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் |
தமிழில் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் அஞ்சலி. கடந்த சில வருடங்களாகவே தமிழில் அதிகப் படங்களில் அவர் நடிக்கவில்லை. ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்த வருடப் பொங்கல் அவருக்கு இரட்டைப் பொங்கலாக அமைகிறது. தெலுங்கில் ராம் சரண் ஜோடியாக அவர் நடித்த 'கேம் சேஞ்ஜர்' படம் நேற்று வெளியானது. அந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியான கியாரா அத்வானியை விடவும் அஞ்சலிக்கு பாராட்டுக்கள் அதிகமாகக் கிடைத்து வருகிறது.
தெலுங்கில் அந்தப் படம் என்றால் தமிழில் நாளை 'மத கஜ ராஜா' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அஞ்சலியும் கதாநாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்தடுத்து இரண்டு மொழிகளில் படங்கள் வருவதால் அஞ்சலி மகிழ்ச்சியாக உள்ளார்.
அடுத்து தமிழில் அவர் நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படம் வெளியாக உள்ளது.