எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
ஷென் ஸ்டூடியோ சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்துள்ள படம் 'தருணம்'. 'தேஜாவு' படத்தை இயக்கிய அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கி உள்ளார். கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், பால சரவணன் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 14ம் தேதி பொங்கல் அன்று வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் நாயகி ஸ்மிருதி வெங்கட்தான் இதில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி நடிக்க வைத்ததாக கூறினார். மேலும் அவர் பேசியதாவது:
என் முதல் படத்தை முடித்த சமயத்தில் தான், கிஷன் நடித்த படத்தைப் பார்த்தேன். அவர் இந்தப் படத்திற்கு மிகச் சரியாக இருப்பார் என்று என் நண்பரிடம் சொன்னேன். அவரிடம் கதை சொன்னேன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தை புதுமுகங்களை வைத்து இயக்க வேண்டும் என்று நினைத்தேன். ஸ்மிருதி வெங்கட் என்னுடைய 'தேஜாவு' படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் செய்தார், அப்போதே அவரிடம் சொல்லியிருந்தேன், உங்களது நடிப்பு நன்றாக இருக்கிறது, ஒரு நல்ல படத்தில் உங்களைக் கதாநாயகியாகப் போடுவேன் என்றேன். அவர் நம்பவில்லை.
இந்தப் படம் ஆரம்பித்த பொழுது, அவர்தான் சரியாக இருப்பார் என்று சொன்னேன். எல்லோரும் தயங்கினார்கள், ஆனால் நான் அவர்தான் சரியாக இருப்பார், இதுவரை செய்யாதவர் இந்தக் கதாபாத்திரம் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதை சொன்னேன். சில விசயங்கள் படத்தில் இருக்கும் யோசித்துச் சொல்லுங்கள் என்றேன். அவருக்குக் கதை பிடித்து இருந்தது. இப்படத்தில் மிக நன்றாக நடித்துள்ளார். வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால் ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் படம். என்றார்.