மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
ஷென் ஸ்டூடியோ சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்துள்ள படம் 'தருணம்'. 'தேஜாவு' படத்தை இயக்கிய அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கி உள்ளார். கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், பால சரவணன் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 14ம் தேதி பொங்கல் அன்று வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் நாயகி ஸ்மிருதி வெங்கட்தான் இதில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி நடிக்க வைத்ததாக கூறினார். மேலும் அவர் பேசியதாவது:
என் முதல் படத்தை முடித்த சமயத்தில் தான், கிஷன் நடித்த படத்தைப் பார்த்தேன். அவர் இந்தப் படத்திற்கு மிகச் சரியாக இருப்பார் என்று என் நண்பரிடம் சொன்னேன். அவரிடம் கதை சொன்னேன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தை புதுமுகங்களை வைத்து இயக்க வேண்டும் என்று நினைத்தேன். ஸ்மிருதி வெங்கட் என்னுடைய 'தேஜாவு' படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் செய்தார், அப்போதே அவரிடம் சொல்லியிருந்தேன், உங்களது நடிப்பு நன்றாக இருக்கிறது, ஒரு நல்ல படத்தில் உங்களைக் கதாநாயகியாகப் போடுவேன் என்றேன். அவர் நம்பவில்லை.
இந்தப் படம் ஆரம்பித்த பொழுது, அவர்தான் சரியாக இருப்பார் என்று சொன்னேன். எல்லோரும் தயங்கினார்கள், ஆனால் நான் அவர்தான் சரியாக இருப்பார், இதுவரை செய்யாதவர் இந்தக் கதாபாத்திரம் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதை சொன்னேன். சில விசயங்கள் படத்தில் இருக்கும் யோசித்துச் சொல்லுங்கள் என்றேன். அவருக்குக் கதை பிடித்து இருந்தது. இப்படத்தில் மிக நன்றாக நடித்துள்ளார். வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால் ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் படம். என்றார்.