இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

2014ம் ஆண்டு வெளியான படம், 'குற்றம் கடிதல்'. பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, மாஸ்டர் விஜய், பாவெல் நவகீதன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் சார்பில் சதீஷ் குமார் தயாரித்திருந்தார்.
தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. இதையும் சதீஷ் குமாரே தயாரிக்கிறார். படத்திற்கு சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார், டிகே இசை அமைக்கிறார். தயாரிப்பாளர் சதீஷ் குமாரே கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறும்போது “கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நான் நடிக்கிறேன். ஓய்வு பெறும் நேரத்தில் குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது” என்றார்.