வாயெல்லாம் அடைத்துவிட்டது : பிறந்தநாள் வாழ்த்தில் நெகிழ்ந்த இளையராஜா | கொலை மிரட்டல் காரணமாக மேனேஜர் மீது போலீசில் புகார் அளித்த உன்னி முகுந்தன் | மகள் பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்றை நீக்கிய ஜோதிகா : சிங்கம் 4 காரணமா? | என்றென்றும் உங்கள் நண்பன் : மணிரத்னத்துக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து | திரை உலகில் அடுத்த சோகம்... இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மறைவு | நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது |
துணை நடிகராக பல படங்களில் நடித்த சுகுமார் 'காதல்' படத்தில் நாயகன் பரத்திற்கு நண்பராக நடித்ததன் மூலம் புகழ்பெற்று 'காதல் சுகுமார்' ஆனார். கலகலப்பு, பொன்னான நேரம், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். திருட்டு விசிடி உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார். தற்போது 'முருகப்பா' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுகுமார் மீது, துணை நடிகை ஒருவர் வடபழனி போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் “நான் துணை நடிகையாக இருக்கிறேன். கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறேன். சினிமாவில் நடிக்கும்போது எனக்கு அறிமுகமான காதல் சுகுமார் என்னோடு நெருக்கமாக பழகினார். பின்னர் காதலித்தார். திருமணம் செய்வதாக கூறி என்னோடு குடும்பம் நடத்தினார். அவ்வப்போது என்னிடமிருந்து பணம், நகைகளை வாங்கினார்.
கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார். தனக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது என்று கூறி திருமணத்திற்கு மறுத்து வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது பணம், நகைளை திருப்ப பெற்றுத் தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.