32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
புராணங்களையும், அதன் கிளை கதைகளையும் அக்குவேறு ஆணிவேராக பிரித்து அந்தக் காலதக்தில் நிறைய படங்கள் வந்தன. அவற்றில் 90 சதவிகித படங்கள் காலத்தால் அழிந்து விட்டது. அப்படி அழிந்து போன படங்களில் முக்கியமானது 'கங்காவதார்'. புராண மாந்தர்களை பற்றி பேசிக் கொண்டிருந்த காலத்தில் கங்கை நதியை பற்றி பேசியது இந்தப் படம்.
புராணங்கள் மற்றும் செவி வழி கதைகளின் அடிப்படையில் கங்கை நதி எப்படி பூமிக்கு வந்தது. அது பெண்ணாக, பின்னர் கொடூர துர்தேவதையாக மாறி கடைசியாக சிவனின் தலையில் எப்படி அவரது துணைவியாக மாறியது என்பது விளக்கமாக சொன்ன படம்.
அன்றைக்கு பிரபலமாக இருந்த என்.சி.வசந்தகோகிலம் கங்கையாக நடித்தார். கங்கை பூமிக்கு வர காரணமாக இருந்த அயோத்தி மன்னன் பகீரதனாக நாகர்கோவில் கே.மகாதேவன் நடித்தார். டி.எஸ்.தமயந்தி பார்வதியாக நடித்தார். எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வரும் காந்தர்வ கன்னியாக நடித்தார். சி.வி.பந்துலு சிவனாக நடித்தார்.
இவர்கள் தவிர ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். காளி என் ரத்தனம் தலைமையிலான காமெடி நடிகர்கள் தனி டிராக்காக காமெடி காட்சிகளில் நடித்தனர். முழு படமும் அடையார் சுந்தரம் ஸ்டூடியோவில் படமானது. இந்த ஸ்டூடியோதான் பிற்காலத்தில் எம்ஜிஆரின் சத்யா ஸ்டூடியோ ஆனது.