விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

புராணங்களையும், அதன் கிளை கதைகளையும் அக்குவேறு ஆணிவேராக பிரித்து அந்தக் காலதக்தில் நிறைய படங்கள் வந்தன. அவற்றில் 90 சதவிகித படங்கள் காலத்தால் அழிந்து விட்டது. அப்படி அழிந்து போன படங்களில் முக்கியமானது 'கங்காவதார்'. புராண மாந்தர்களை பற்றி பேசிக் கொண்டிருந்த காலத்தில் கங்கை நதியை பற்றி பேசியது இந்தப் படம்.
புராணங்கள் மற்றும் செவி வழி கதைகளின் அடிப்படையில் கங்கை நதி எப்படி பூமிக்கு வந்தது. அது பெண்ணாக, பின்னர் கொடூர துர்தேவதையாக மாறி கடைசியாக சிவனின் தலையில் எப்படி அவரது துணைவியாக மாறியது என்பது விளக்கமாக சொன்ன படம்.
அன்றைக்கு பிரபலமாக இருந்த என்.சி.வசந்தகோகிலம் கங்கையாக நடித்தார். கங்கை பூமிக்கு வர காரணமாக இருந்த அயோத்தி மன்னன் பகீரதனாக நாகர்கோவில் கே.மகாதேவன் நடித்தார். டி.எஸ்.தமயந்தி பார்வதியாக நடித்தார். எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வரும் காந்தர்வ கன்னியாக நடித்தார். சி.வி.பந்துலு சிவனாக நடித்தார்.
இவர்கள் தவிர ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். காளி என் ரத்தனம் தலைமையிலான காமெடி நடிகர்கள் தனி டிராக்காக காமெடி காட்சிகளில் நடித்தனர். முழு படமும் அடையார் சுந்தரம் ஸ்டூடியோவில் படமானது. இந்த ஸ்டூடியோதான் பிற்காலத்தில் எம்ஜிஆரின் சத்யா ஸ்டூடியோ ஆனது.