டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

தமிழில் சிம்பு நடித்த ஈஸ்வரன், ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். தெலுங்கில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ராஜா சாப் மற்றும் பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஒரு நபர் மூலமாக சைபர் தாக்குதலுக்கு ஆளாகி வந்துள்ளார் நிதி அகர்வால்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையில் தற்போது அந்த நபர் மீது புகார் அளித்துள்ளார் நிதி அகர்வால். அந்த புகாரில் அவர் கூறும்போது, சம்பந்தப்பட்ட அந்த நபர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய பெயரை களங்கப்படுத்தும் விதமாக தரக்குறைவான மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளதோடு அதற்கான ஆதாரங்களையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தான் மலையாள நடிகை ஹனிரோஸ், இப்படி தன் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபர் மீது காவல் துறையில் புகார் அளித்து அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.