Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமிதாப்பச்சன் படத்தில் நான் நடித்திருக்க கூடாது ; வெளிப்படையாகவே வருந்திய ராம்சரண்

09 ஜன, 2025 - 10:37 IST
எழுத்தின் அளவு:
I-shouldnt-have-acted-in-Amitabh-Bachchans-film-Ram-Charan-openly-regrets


'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் படம் 'கேம் சேஞ்ஜர்'. சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 10ம் தேதி) இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ராம்சரண். அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் டிவி ஷோவான அன்ஸ்டாப்பபிள் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராம்சரண். அப்போது அவரிடம் நீங்கள் இந்த படத்தில் நடித்திருக்க வேண்டாமே என்று எந்த படத்திலாவது நடித்ததற்காவது வருத்தப்படுகிறீர்களா என்று பாலகிருஷ்ணா கேட்டபோது அதற்கு சற்றும் தயங்காமல் ''ஜஞ்சீர் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்'' என்று கூறினார் ராம்சரண்.
அப்படி ராம்சரண் கூறிய ஜஞ்சீர் திரைப்படம் கடந்த 2013ல் ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிப்படமாக உருவானது. ஹிந்தியில் 'ஜஞ்சீர்' என்றும் தெலுங்கில் 'தூபான்' என்கிற பெயரில் இது வெளியானது. பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்திருந்தார். ஹிந்தியில் ராம்சரண் நடித்த முதல் படமாக இது அமைந்தது. ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்த படம் 1973ல் அதாவது கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பு அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ஜஞ்சீர் என்கிற படத்தை ரீமேக் செய்து உருவாக்கப்பட்டது.

அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் ராம்சரண் நடித்திருந்தார். தற்போதைய காலத்திற்கும் அதேசமயம் ராம்சரணுக்கும் ஏற்ற கதையாக இல்லாததால் இந்த படம் தோல்வியை தழுவியது. அதனால் இந்த படத்திலும் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்க வேண்டாமே எனத் தான் வருத்தப்பட்டதாக கூறியுள்ளார் ராம்சரண்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோஅஜித் பிறந்தநாளில் வெளியாகும் ... கூடுதல் நேரத்துடனான 'புஷ்பா 2' வெளியீடு தள்ளி வைப்பு கூடுதல் நேரத்துடனான 'புஷ்பா 2' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)