மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர இயக்குனர் கே.சுப்ரமணியம். பவளக்கொடி, நவீன சாதரம், குசேலா, பாலயோகினி, சேவாதனம், தியாகபூமி, பிரகலாதா உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களை இயக்கியவர், நிறைய படங்களை தயாரிக்கவும் செய்தவர். சின்ன சின்ன வேடங்களிலும், சிறப்பு தோற்றங்களிலும் நடித்தார். ஆனாலும் அவர் நாயகனாக நடித்த படம் 'அனந்தசயனம்'. இந்த படத்தில் அவரது ஜோடியாக நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமியை திருமணமும் செய்து கொண்டார். அவரே படத்தை தயாரித்து இயக்கினார்.
இவர்களுடன் பட்டு அய்யர், வித்வான் சீனிவாசன், உள்பட பலர் நடித்தார்கள். கமல்கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் அவர் காட்டிய சில மாயாஜால காட்சிகள் அப்போது பேசு பொருளாக இருந்தது. பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். திருவிதாங்கூர் சமஸ்தான ரகசிய அறையில் பாதுகாக்கப்படும் ஒரு முக்கியமான ஓலை சுவடியை அடிப்படையாக கொண்ட பேண்டசி திரில்லர் வகை படம். படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதால் அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.