ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் தில்லுக்கு துட்டு 3வது பாகம் ' டிடி ரிட்டர்ன்ஸ்' எனும் பெயரில் வெளியானது. இதனை ராம்பாலாவின் உதவி இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கினார். இப்படம் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது.
அதைத்தொடர்ந்து மீண்டும் பிரேம் ஆனந்த் , சந்தானம் கூட்டணியில் 'டிடி ரிட்டர்ன்ஸ்' 2ம் பாகம் உருவாகிறது என்றும் இதனை நடிகர் ஆர்யா தயாரிக்கின்றார் என அறிவித்தனர். அதன்பிறகு இந்த படம் குறித்து எந்த வித அப்டேட் வெளியாகவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பை சென்னை மற்றும் புதுச்சேரியில் பிரமாண்டமான கப்பலில் கிட்டத்தட்ட முழு படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறதாம். கடந்த பாகங்கள் பெரும்பாலும் ஒரே வீடு அல்லது பங்களாவில் நடைபெற்றது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இந்த படத்தின் டீசரை பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.