மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
இயக்குனர் ஷங்கர் இந்தியளவில் பிரமாண்டமான இயக்குனர் என கொண்டாடபடுபவர். கடைசியாக அவரது இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த 'இந்தியன் 2' படம் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை தந்தது. அதன்பிறகு ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி உள்ள 'கேம் சேஞ்சர்' படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
இதற்கான புரொமோசன் நிகழ்ச்சிகளில் ஷங்கர் கலந்து கொண்டபோது அவரின் அடுத்த படம் பற்றி கேள்வி எழுந்த போது அவர் கூறியதாவது, "வேள்பாரி நாவலை படத்திற்கான திரைக்கதையாக முழுவதுமாக தயார் செய்து வைத்துள்ளேன். தற்போது முன் தயாரிப்பு கட்டத்தில் உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும். அதிகாரப்பூர்வமான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என கூறினார்.