ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
பாலா இயக்கி உள்ள 'வணங்கான்' படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். முதலில் இந்த படத்தில் சூர்யா, கிர்த்தி செட்டி, மமிதா பைஜு நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யாவும் கிர்த்தி செட்டியும் விலகி விட்டனர். மமீதா பைஜூ விலக்கப்பட்டார்.
இதுகுறித்து பின்னர் மமிதா கூறும் போது "வணங்கான் படத்தில் இருந்து நான் விலக்கப்படவில்லை நான் தான் விலகினேன். படப்பிடிப்பு தளங்களில் பாலா கடுமையாக நடந்து கொள்கிறார். ஒருமுறை சரியாக நடிக்கவில்லை என்று கூறி முதுகில் அடித்தார். அவருடன் பணியாற்ற முடியாது என்பதால் நானே விலகிவிட்டேன்" என்று கூறியிருந்தார்.
இது குறித்து பாலா இதுவரை எதுவும் சொல்லாமல் இருந்தார். தற்போது, 'வணங்கான்' படம் குறித்து மீடியாக்களிடம் பேசி வரும் பாலா மமீதாவை அடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். "மமிதா நடிக்க வேண்டிய கேரக்டருக்கு மேக்கப் தேவையில்லை ஆனால் அவர் ஒரு நாள் நிறைய மேக்கப்புடன் படப்பிடிப்புக்கு வந்தார். ஏன் இவ்வளவு மேக்கப் போட்டு வந்திருக்கிறாய் என்று கூறி அடிப்பதுபோல கை ஓங்கினேனே தவிர அடிக்கவில்லை. பின்னர் தான் மேக்கப் உமன் மும்பையைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு படத்தின் கதை, கேரக்டர் குறித்து எதுவும் தெரியாது என்பதும் தெரிய வந்தது. அதற்குப் பிறகு இருவரும் சகஜம் ஆகிவிட்டோம் என்று கூறி இருக்கிறார்.