ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! | சூர்யா 45வது படத்தில் வில்லன் வேடத்தில் மன்சூர் அலிகான்! | எஸ்.எஸ்.ராஜமவுலி, மகேஷ் பாபு படத்திற்காக பிரியங்கா சோப்ராவின் சம்பளம் எவ்வளவு? | நாளை வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு! | அஜித்குமார் உடல் எடையை குறைத்தது எப்படி! - சீக்ரெட்டை வெளியிட்ட ஆரவ் | திரைக்கு வந்து ஒன்பது நாட்களில் 13 கோடிக்கு மேல் வசூலித்த குடும்பஸ்தன்! | வேட்டையன் வில்லன் ராணாவை இயக்கும் பி.எஸ்.மித்ரன்! |
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க 'டிமான்டி காலனி, டிமான்டி காலனி 2' ஆகிய படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தின் மூன்றாவது பாகத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டாராம் அஜய் ஞானமுத்து.
அருள்நிதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். கதாநாயகி யார் என்பதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு பாகங்களின் கதைக்களமும் சென்னையில் இருந்தது. ஆனால், மூன்றாவது பாகத்திற்கான கதைக்களத்தை வெளிநாட்டில் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்களாம்.
அதற்கான இடங்களைத் தேர்வு செய்ய ஐரோப்பாவில் உள்ள மால்டா தீவுகளுக்கு அஜய் ஞானமுத்து சென்றுள்ளதாகத் தகவல். 2025ம் ஆண்டிலேயே படப்பிடிப்பை ஆரம்பித்து அதே வருடத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். தமிழ்ப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடும் கோல்டுமைன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறது. விரைவில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம்.