ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 25 நாட்கள் ஆகிறது.
1700 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்திருந்தாலும் தெலுங்கு மொழியில் வெளியான ஆந்திர, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டதே காரணம் என்கிறார்கள். தெலுங்கு மாநிலங்களில் 'சிடட்' என அழைக்கப்படும் ஏரியாவில் மட்டும் லாபத்தைப் பெற்றுள்ளதாம். சில ஏரியாக்களில் நஷ்டமும், சில ஏரியாக்களில் நஷ்டமில்லாத விதத்தில் வசூலையும் பெற்றுள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
அது போல அமெரிக்காவில் கூட அதிக விலைக்கு விற்கப்பட்டதால் அங்கும் குறைவான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது. ஹிந்தியில் மிகப் பெரும் லாபத்தைப் படம் பெற்றுக் கொடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகாவில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைத்துள்ளது. கேரளாவில் எதிர்பார்த்த வசூல் இல்லாத காரணத்தால் நஷ்டம் வரலாம் எனத் தகவல்.
பொங்கல் வரை பெரிய படங்கள் இல்லாததால் இன்னும் பத்து நாட்களுக்கு 'புஷ்பா 2' படம் சில தியேட்டர்களில் ஓட வாய்ப்புள்ளது.