ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 25 நாட்கள் ஆகிறது.
1700 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்திருந்தாலும் தெலுங்கு மொழியில் வெளியான ஆந்திர, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டதே காரணம் என்கிறார்கள். தெலுங்கு மாநிலங்களில் 'சிடட்' என அழைக்கப்படும் ஏரியாவில் மட்டும் லாபத்தைப் பெற்றுள்ளதாம். சில ஏரியாக்களில் நஷ்டமும், சில ஏரியாக்களில் நஷ்டமில்லாத விதத்தில் வசூலையும் பெற்றுள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
அது போல அமெரிக்காவில் கூட அதிக விலைக்கு விற்கப்பட்டதால் அங்கும் குறைவான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது. ஹிந்தியில் மிகப் பெரும் லாபத்தைப் படம் பெற்றுக் கொடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகாவில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைத்துள்ளது. கேரளாவில் எதிர்பார்த்த வசூல் இல்லாத காரணத்தால் நஷ்டம் வரலாம் எனத் தகவல்.
பொங்கல் வரை பெரிய படங்கள் இல்லாததால் இன்னும் பத்து நாட்களுக்கு 'புஷ்பா 2' படம் சில தியேட்டர்களில் ஓட வாய்ப்புள்ளது.